தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருடன் சந்திப்பு

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 15- 17 வரை நடைபெறவுள்ள உத்தமத்தின் 21 வது தமிழ் இணைய மாநாட்டுக்கான ஆதரவினை பெற்றுக்கொள்வதற்காக தமிழ்நாடு தகவல்தொழில் நுட்ப அமைச்சர் மாண்பு மிகு மனோ தங்கராஜ் அவர்களுடனான உத்தியோக பூர்வ சந்திப்பு 28.10.2022 அன்று சென்னையில் இடம்பெற்றது. சந்திப்பில் தஞ்சை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் திருவள்ளுவன் , உத்தமத்தின் தற்போதய தலைவர் த.தவரூபன், உத்தமத்தின் முன்னாள் தலைவர் முனைவர் மா.கணேசன் , உத்தமம் செயல் இயக்குனர் முனைவர் இ.பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டு அமைச்சருக்கு மாநாடு குறித்து எடுத்து கூறினர். மாநாடு சிறப்புற தனது ஆதரவினை வழங்க அமைச்சர் உறுதியளித்தார்